ரகசியமாக அணு ஆயுதங் களை தயாரிக்க பாகிஸ்தானில் புதிதாக அணு உலை

 ரகசியமாக அணு ஆயுதங் களை தயாரிக்க பாகிஸ்தான் அணு உலைகளை நிறுவியுள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த 15ம் தேதி செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய அணு உலை அமைந்துள்ளதற்கு ஆதாரம் சிக்கியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப்மாவட்டத்தில் இருக்கும் அணு உலை வளாகத்தில் புதிய அணு ஆயுத தயாரிப்புக்கான உலைகள் அமைக்கப்பட்டுள்ளன,

இந்த 4வது அணு உலை ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அணுஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் தீவிரமாக இறங்கியுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதபரவல் தடைச் சட்டத்தை வலியுறுத்தி வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் இதனை பிரதமர் நரேந்திரமோடி அவரது கவனத்திற்கு கொண்டுசெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஷாப் மின் நிலையம் 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அணு மின் உற்பத்திக்கு தேவைப்படும் கடினநீர் உற்பத்தி ஆலை அதில் நிறுவபட்டது.

1998ம் ஆண்டு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அணுகுண்டுகள் வெடிப்பு சோதனைகள் நடந்ததற்கு பின்னர் குஷாப் அணு மின் நிலையத்தில் 2000-ம் ஆண்டு முதல் மூன்று அணு உலைகள் அமைக்கப்பட்டன. தற்போது 4வது உலை செயல்படுவது ஆதாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...