நாடு முழுவதும் சமுதாய வானொலி

 சமுதாய வானொலியை தொடங்க உரிமம்பெறுவதற்கு, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை செயல் படுத்துவது குறித்து பரிசீலிக்கபட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசியசமுதாய வானொலி சம்மேளனத்தின் 5-வது மாநாடு புதுதில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் விமல் ஜுல்கா பேசியதாவது: சமுதாய வானொலி திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார்.

வானொலியில் மோடி உரை நிகழ்த்தும் "மன் கீ பாத்' நிகழ்ச்சி, நாட்டின் மூலை முடுக் கெல்லாம் சென்றடைந்துள்ளது.

முக்கிய ஊடகங்களில் எப்போதாவது தனது குரலைப் பதிவுசெய்யும் கிராமப்புற சமுதாயங்களை முன்னேற்றுவதற்கு சமுதாய வானொலி திட்டம் முக்கியமானதாகும்.

அந்த வானொலியைத் தொடங்குவதற்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை, தொடர்ச்சியாக எளிமையாக்கி வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக, உரிமத்துக்காக இணையதளங்களில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்துவருகிறோம்.

அலைக்கற்றையானது பொது மக்களின் சொத்து , அது அவர்களுக்கே பயன்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளில் தேசியப்பேரிடர் மேலாண்மை குழுவுக்கு உதவுவதில் சமுதாய வானொலிகளின் பங்கு மிகப்பெரியதாகும். களநிலவரம், ஆலோசனைகளை அவை தெரிவிக்கின்றன.

அகில இந்திய வானொலியின் செய்திகளை அடிப்படையாக கொண்டு அல்லது அதனை மொழி மாற்றம் செய்து, சமுதாய வானொலிகளில் செய்திகளை ஒலிபரப்ப அனுமதிக்கலாம் என்று "டிராய்' பரிந்துரைத்துள்ளது.

நாடுமுழுவதும் 400 சமுதாய வானொலிகளை தொடங்க இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 179 சமுதாய வானொலிகள் தொடங்கப் பட்டுள்ளன என்று செய்தி, ஒலிபரப்பு அமைச்சகச் செயலாளர் தெரிவித்தார்.

சிறப்பான திட்டம்: முன்னதாக, இந்தமாநாட்டைத் தொடங்கி வைத்து, அருண்ஜேட்லி பேசியபோது, "நாடு முழுவதும் சமுதாய வானொலிகளை தொடங்குவது என்பது சிறப்பான திட்டம்' என்றார்.

ஒலிபரப்பாளர், தகவல் பரப்புபவர், தகவல்களை அறியவிரும்பும் நேயர் ஆகியோரை இணைக்கும் பாலமாக சமுதாய வானொலிகள் இருக்கும் என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...