பாரம்பரிய முறைப்படி மீன் பிடிக்க எழுத்துப் பூர் அனுமதி

 மீனவ பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மீனவ சங்க பிரதிநிதிகளிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். காரைக்கால், பாண்டிச்சேரி, ராமதாதபுரம், நாகை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் படுவதும், படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும் தொடர்வதாக தெரிவித்துள்ள மீனவர்கள், பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணுமாறு வலியுறுத்தினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆழ் கடல் மீன்பிடிப்பை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் என்று மீனவர்களிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மேலும், எல்லையைத் தாண்டிச்சென்று, பாரம்பரிய முறைப்படி மீன் பிடிப்பதென்றால் அதற்கு எழுத்துப் பூர் அனுமதி பெற்றுத்தர மத்திய அர‌சு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.