புவிவிஞ்ஞானத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா பின் தங்கி விடவில்லை

 நிலநடுக்கங்களை முன் கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன சாதனங்கள் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்ற மக்களவையில் ஹர்ஷ வர்தன் கூறியதாவது:-

அனைத்தும் முறையாக கண்காணிக்கப்படுகிறது . முன்கூட்டியே எச்சரிக்கைகளை அளித்து வருகிறோம். நில நடுக்கங்களை முன்கூட்டியே கணிக்கும் தொழில் நுட்பங்கள் இப்போதைக்கு இல்லை .

முடிந்தவரை தகவல்களை, எச்சரிக்கைகளை விரைவில் அளித்து வருகிறோம், சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமரைவிட முன்கூட்டியே தகவல் கிடைத்து விட்டது. இந்த விஷயத்தில் நாடு அபரிமிதமான முன்னேற்றம் கண்டுள்ளது.

புவிவிஞ்ஞானத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா பின் தங்கி விடவில்லை. அதேபோல் வானிலை அறிவிப்பு, பருவ நிலை திடீர் மாற்றங்களைக்கூட விரைவில் அறிவித்து எச்சரிக்கை செய்து வருகிறோம்.

விவசாயத்தை பாதிக்கும் திடீர்புயற்காற்று போன்றவற்றை தடுக்க முடியாது, ஆனால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வழியுண்டு. இதற்காக இத்துறை சார்ந்த தொழில் நுட்பத்தில் முன்னேறிய சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளோம்.என்று  அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...