ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம்

 ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம்'', என்று சென்னையில் நடந்த போராட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ஆவின்பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரியும், ஆவின் நிறுவனத்தை கண்டித்தும் பாஜக. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த ஒருவருட பாஜக. ஆட்சியில் பொருளாதார ரீதியில் இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால் தமிழகம் பின்னோக்கி சென்று வருகிறது. ஆவின் நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தினமும் 23 லட்சம் லிட்டர் பாலிலும் ஊழல்நடக்கிறது. 'தட்டிகள்' வைத்து அரசாங்க அதிகாரிகளை தட்டிக்கேட்கும் அளவுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்தகாரர்கள் வந்துவிட்டனர். அதிமுக. அரசில் நடந்து வரும் ஒவ்வொரு ஊழலும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

தமிழக அரசின் நடவடிக்கைகளில் நிகழும் ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு தவறான செயல் பாட்டிற்கும் எதிராக பாஜக. போராட்டத்தில் ஈடுபடும். அதிமுக., தி.மு.க.வுக்கு எதிராக ஒரு மாற்று சக்தியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. ஊழல் ஒழிப்பு ஒன்றே எங்களின் லட்சியம். எனவே தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல்கட்சிகளை விரைவில் ஒன்றிணைப்போம். போராட்டம் நடத்துவோம்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எச்.ராஜா கூறுகையில், ''விலையில்லா கால்நடைகளை கொடுத்து விட்டு, பால் வியாபாரத்தையும் ஊக்குவித்து இப்போது 15 சதவீத பாலைவாங்க மறுக்கும் அரசின் செயல்பாடு நியாயமற்றது. உற்பத்தி செய்த பாலை அடுத்த 4 மணி நேரத்தில் காய்ச்சி பதனிடவேண்டும். அப்படி இல்லை என்றால், பால் கெட்டுவிடும். எனவே தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'', என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...