வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தானி யங்கி தகவல் பரிமாற்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்

 ”கறுப்புபணம் பதுக்கலை ஒடுக்கும் வகையில், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் பற்றிய விவரங்கள், தானி யங்கி தகவல் பரிமாற்ற முறையில் உலக நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்” என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் உலகவங்கி கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஐந்து நாள் பயணமாக, கடந்த 7ம் தேதி தெற்கு அமெரிக்காவில் உள்ள பெருநாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

தலைநகர் லிமாவில் நடைபெற்ற காமன் வெல்த் நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்களின் 49வது ஆண்டு கூட்டத்தில் உள் கட்டமைப்புகளுக்கு நிதி, சிறு நாடுகளுக்கு வர்த்தக நிதி யுதவி செய்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.

கூட்டத்தில் அருண்ஜெட்லி பேசியதாவது: சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு செய்பவர்கள், வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் ஆகியோரை பற்றி தானி யங்கி முறையில் தகவல் பகிர்ந்து கொள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ‘பொதுஅறிக்கை விவரப் பட்டியல்’ அமல்படுத்த வேண்டும். வரி ஏய்ப்பு செய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உத்திகளை களையவும், வரிஏய்ப்பு நிறுவனங்கள் பற்றி தானியங்கி தகவல் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்பட வேண்டியதும் முக்கியமானதாகும்.

அதனால், உலக நாடுகளிடையே வரி சீரமைப்பு மாற்றங்கள் (பிஇபிஎஸ்) கொண் வர பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுக்கான அமைப்பு (ஓபிசிடி) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை காமன்வெல்த் நாடுகள் அமல்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை உணர வேண்டும். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, சர்வதேசவரி விதிகளில் காணப்படும் ஓட்டைகள் அடைக்கப்பட்டு, வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி அரசு கவலைகொள்ளாத அளவுக்கு தீர்வுகிடைக்கும். அதோடு, வரியே செலுத்தாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து, பொருளாதார வளர்ச்சியை குறைப்பது பெருமளவு கட்டுப்படுத்தபடும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...