உணவகங்களில் வாடிக்கை யாளர்களிடம் வசூலிக்கப்படும் சர்வீஸ்சார்ஜ் ஆனது தனிப்பட்ட முறையிலேயே பெறப்படுவதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்துள்ள விளக்கத்தில், ‘சில உணவ கங்களில் உணவுக்கான கட்டணம் மட்டுமின்றி, சர்வீஸ்சார்ஜ் என்ற பெயரில் ஒருதொகை வசூலிக்க படுகிறது. இது முழுக்கமுழுக்க சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு மட்டுமே சொந்தமாகும்.
இதற்கும் அரசிற்கும் எந்த தொடர்புமில்லை' , குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட உணவகங்களில் உணவிற்கான தொகையில், 40 சதவீதத்திற்கு மட்டுமே 5.6 சதவீதம் சர்வீஸ்சார்ஜாக வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்தமாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, குளிர்சாதன வசதி செய்யப் படாத எந்த உணவகங்களிலும் சர்வீஸ்சார்ஜ் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.