மோட்டார் வாகனங்கள் ஜனவரி 26-ந் தேதி முதல் எத்தனாலில் ஓடும்

உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

பிரேசில் நாட்டைப் போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார்வாகனங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி முதல் எத்தனாலில் ஓடும்.

ஹோண்டா, யமஹா மோட்டார் வாகனநிறுவனங்கள், இத்தகைய மோட்டார் சைக்கிள்களை தயாரித்து உள்ளன. எத்தனால் கொண்டு ஓடும்மோட்டார் சைக்கிள்கள் மூலம் வரும் லாபத்தினை கரும்பு விவசாயிகள் நேரடியாக அனுபவிப்பார்கள்.

பெட்ரோல் பம்புகளை போன்று எத்தனால்பம்புகள் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26-ந்தேதி) செயல்பட தொடங்கும். இதற்கான உரிமங்கள் வழங்குவது தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு அரசு உறுதிகொண்டுள்ளது என்றார்.

 

தற்போது நாட்டில் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோல், டீசலில்தான் ஓடுகின்றன. இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இவற்றை இறக்குமதிசெய்வதால் நாட்டுக்கும் பெருமளவு அன்னியச் செலாவணி இழப்பு ஏற்படுகிறது.

எத்தனால் கரும்புச் சாறைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் உருவாகும் . சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். அவ்வப்போது பெட்ரோல், டீசல்விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.பிரேசில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மாற்று எரி பொருளாக எத்தனால் பயன்படுத்தப் படுகிறது. அந்த வரிசையில் நமது நாடும் சேரப்போகிறது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...