மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்

மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்ததை யொட்டி ‘வளர்ச்சித் திரு விழா’ என்ற பெயரில் நாடுமுழுவதும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ் பூரில் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்திய மக்கள் வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வன்முறை நாட்டின்வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. ஏழைகள் மற்றும் பொது மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அப்பாவி மக்களை கொல்லமாட்டார்கள். வேறு சித்தாந்தத்தை மாவோயிஸ்டுகள் பின்பற்றலாம். ஆனால், அது அப்பாவிமக்களை கொல்வதாக இருக்கக்கூடாது.

எனவே, மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும். வன்முறையை கைவிட்டால் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச மத்திய அரசு தயாராக உள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...