காவல் துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

திருவள்ளூர் மாவட்ட பாஜக. செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாதி கொலைவழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளி என சந்தேகிக்கப் படும் நபரை போலீசார் கைது செய்தது பாராட்டுக்குரியது. இருப்பினும், மாநிலத்தில் பல்வேறு கொலைவழக்குகள் காவல்துறையால் கண்டு கொள்ளப்படாமலும், துப்பு துலக்கப்படாமலும் உள்ளன.

குறிப்பாக பாஜக. பிரமுகர்கள், அதன் சகோதர இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொடர்பான கொலைவழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழக காவல்துறை மெத்தனம்காட்டி வருகிறது. இதற்குகாரணம் காவல் துறையில் உள்ள ஆள்பற்றாக் குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள்.

எனவே, தமிழக முதல்வர் காவல்துறையை மேம்படுத்த உரியநடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றங்கள் குறைய வேண்டுமானால், பள்ளிகளில் தினந் தோறும் காலையில் நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுகுறித்து கல்வித்துறை முறையான அறிவிப்பை வெளியிடவேண்டும்.

தமிழக எல்லையில் ஆந்திரமாநில அரசு பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தி கட்டியது கண்டனத்துக்குரியது. இதற்குக்காரணம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கும், முறையாக கண்காணிக் காததும்தான் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...