தேசியக் கொடி நம் தாய்க்கு சமமானது

அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள். !
தேசியக் கொடி நம் தாய்க்கு சமமானது.

அதனால் தான் அதை “தாயின் மணிக்கொடி பாரீர் “ என்று பாடினார் பாரதி. நம் தேசியக் கொடி நம் உயிர் போன்றது. அதனால் தான் குமரன் கொடி தோளில் இருக்கலாமே தவிர தரையில் படக் கூடாது என்று போராடினார்.இக்கொடி நம் தொப்புள் கொடியை விட நம் வாழ்வோடு தொடர்புடையது.


அதனால் தான் நம் இளைஞர்களின் வீர உதாரணமாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு முன்பே அந்தமானில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு சுதந்திரத்தை பிரகடனம் செய்துவிட்டு  அடுத்த பிறவி என்று உண்டென்றால் நான் தமிழனாகப் பிறக்க வேண்டும் என உரையாற்றினார்.


அதுமட்டுமல்ல நம் கொடி சுதந்திரத்தன்று கொடியேற்றும்போது மங்களகரமாக இருக்க வேண்டும் என்று தமிழரான திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசிக்க வாசிக்கத் தான் நம் முதல் சுதந்திரக் கொடியே மேலெழும்பியது.


ஆனால் இன்று தமிழகத்தில்  மனதை குலுங்க வைக்கும்படி நம் உயிருக்கு நிகரான தேசியக் கொடி அவமதிக்கப்படுவதும் கருப்பாக சித்தரிக்கப்படுவதும் வேதனை அளிக்கக் கூடியது. நம் தேசியக் கொடியை அவமதிப்பவர்கள் தமிழனாக இருக்க முடியாது ஏன் மனிதனாகக் கூட இருக்க முடியாது.

அது மட்டுமல்ல நம் நாட்டின் உணர்வு மட்டுமல்ல சட்டமும் அதை அனுமதிப்பதில்லை. அதனால் தேசிய கொடியை அவமதிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். நேரில் மட்டுமல்ல முகநூலிலும் இணையத்திலும் தேசியக் கொடியை அவமதிப்பதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது. தெரியாது செய்திருந்தால் இனி தவிர்க்கவும். தெரிந்து செய்திருந்தால் தடுக்கவும் நீக்கவும்.


நான் தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் வைக்கும் கோரிக்கை தேசியக் கொடியை அவமதிப்பவர்களை நேரில் மட்டுமல்ல முகநூலில் அவமதிப்பதையும் தடுக்க வேண்டும். மீறி அவர்கள் அவமதிப்பார்களானால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இப்படி அவர்கள் நம் தாய்க்கு சமமான தேசியக் கொடியை அவமதிப்பது முகத்தின் நேராக இருந்தாலும் சரி முக நூலாக இருந்தாலும் சரி உடனே கண்டறியப்பட வேண்டும் தண்டிக்கப் பட வேண்டும்.


எப்படி இளைஞர்களின் இடையே புகுந்த தேச விரோத சக்திகள் தவறாக நல்ல இயக்கத்தை திசை திருப்பினார்களோ அதே போல தேச விரோதிகள் இளைஞர்கள் என்ற போர்வையில் இதை செய்யக்கூடும். அதனால் தேசியக் கொடியின் மாண்பு காக்கப்பட வேண்டும். அதற்கு ஊறு விளைவிப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். அரசும் காவல்துறையும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியினர்  தொண்டர்கள் அனைத்து மண்டல்களிலும் மாவட்டங்களிலும் உற்சாகத்துடன் தேசியக் கொடியோடு ஊர்வலம் சென்று தேசியக் கொடியேற்றி இந்த குடியரசு தினத்தை மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.


இந்தக் குடியரசு தினத்தை தேச பக்தி தினமாக கொண்டாடுவோம்.
அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.
தேசியக் கொடி நம் தாய்க்கு சமமானது. !


                                       என்றும் மக்கள் பணியில்


                                     (Dr. தமிழிசை சௌந்தர்ராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...