மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில்மாதவ் தவே, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு வயது 60. மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய அமைச்சராக மோடி அமைச்சரவையில் செயல்பட்டுவந்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டுசென்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, அனில் தவே குடும்பத்துக்கு இரங்கல்தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கலில், 'அனில் மாதவ் தவேயின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நேற்று மாலைகூட அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், சுற்றுச்சுழலைக் காப்பதில் தனிக்கவனம் செலுத்தியவர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.