தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம்

‘அரசியல் கட்சிகளிடம் ஒருமித்தகருத்து ஏற்பட்டால், எதிர்காலத்தில் நடக்கும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம்’’ என்று பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் முழுக்க முழுக்க மின்னணு இயந்திரங்களே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் குறிப்பிட்ட கட்சிக்கே (ஆளும் கட்சி) வாக்குகள் பதிவாகும்வகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்கிறது என்று சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பாமக உட்பட பல கட்சிகள் புகார்கள் தெரிவித்தன.

கடந்த 2017-ல் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளில், பாஜக 325 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற புகார் அதிகமானது.

ஆனால், மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப் பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும்மீண்டும் உறுதியாகத் தெரிவித்து வருகிறது.

எனினும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதில்மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கடந்த சனிக் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிலமணி நேரங்களில், இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் அதற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டால், எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.

வாக்குச் சீட்டுக்குமாற்றாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன் படுத்தலாம் என்று அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். எனினும், வாக்குசீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என எல்லா அரசியல் கட்சிகளும் விரும்பினால், அனைவ ருடனும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...