திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்

திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


     மதுரைவிமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு 100 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்னையாக உள்ளது. நீண்டகாலத்துக்கு பின் உச்சநீதிமன்றம் இப்பிரச்னைக்கு ஒருதீர்ப்பு வழங்கியுள்ளது. அதை நடைமுறைப் படுத்த, தீர்ப்பின் வார்த்தைகளில் உள்ள பிரச்னைகள் மேலும் 100 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடாது என்பதற்காக விளக்கமாகக் கேட்கப்பட்டுள்ளது.


     காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டிய சூழல் வந்துவிடும் எனக் கூறியுள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் திருநாவுக்கரசர், திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். 


    அதேநேரம், அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜக வெற்றிபெற்றால், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி பிரச்னைக்கு தீர்வுகாண்பேன் என்றும் கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் இதனை புரிந்துகொள்ளவேண்டும். 


     திமுக, காங்கிரஸ் கட்சியினர் நடை பயணத்தை நிறுத்துங்கள் என, விவசாயிகள் வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர்படுகொலை, மீனவர் பிரச்னை என 50 ஆண்டுகள் எங்களை ஏமாற்றியது போதும் என, தமிழக மக்கள் அவர்களிடம் கூறவேண்டும்.


    துணைவேந்தர் நியமனம் குறித்து, அதிமுக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப் பேரவையில் திருத்தங்கள் கொண்டுவந்தது. அப்போது திமுக எதுவும் பேசாமல், தற்போது அதனை எதிர்க்கின்றது. இவர்களின் இரட்டைவேடங்களுக்கு மக்கள் முடிவு கட்டவேண்டும். 


    காவிரி பிரச்னை தொடர்பாக தமிழகமுதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒதுக்க வில்லை என கூறாதபோது, பிரதமர் நேரம் ஒதுக்க வில்லை என எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டுவது சரியல்ல. இப்பிரச்னை தொடர்பாக, முதலில் அத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து பேசிய பின்புதான் பிரதமரை சந்திக்கவேண்டும். இதனை மாற்றிக்கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...