தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது

உத்தரப்பிரதேசம் உன்னவ், காஷ்மீரின் கதுவாபகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் மோடி மவுனம்கலைத்து பேசியுள்ளார்.

கடந்த இருநாட்களாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் ஒருபண்பட்ட சமூகத்தில் நடந்த செயலாக இருக்க முடியாது. ஒரு நாடாக, சமூகமாக நாம் வெட்கப்பட வேண்டும். குற்றம்செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். முழுமையான நீதி என் மகள்களுக்கு நிச்சயம்கிடைக்கும் என உறுதிகூறுகிறேன் என மோடி ஆவேசமாகப் பேசினார்.

 டெல்லியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை பிரதமர்மோடி திறந்து வைத்தார். அந்தநிகழ்ச்சியில் எதிர்க் கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக, பிரதமர் மோடி  பேசியதாவது:

நாடுசுதந்திரம் அடைந்தபின் ஏராளமான அரசுகள் ஆட்சிக்கு வந்திருக்கலாம், சென்றிருக்கலாம். ஆனால், டாக்டர் அம்பேத்கரை போற்றும்வகையில் நாங்கள் (பாஜக) செய்த பணிகள்போல் யாரும் செய்ததில்லை. இந்த நினைவரங்கம் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப் படுகிறது.

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அரசுக்கு பின் வந்த காங்கிரஸ் அரசு இந்த நினைவரங்கம் அமைக்க வேண்டியது தொடர்பாக பாஜக அரசு தாயாரித்து வைத்திருந்த கோப்பு களையும், திட்டங்களையும் முடக்கி, மூடிவிட்டது.

ஆனால், 2014ம் ஆண்டு பாஜக அரசு பணிசெய்ய மக்கள் வாய்ப்பளித்தனர். அதன்பின் அந்தகோப்புகளையும், திட்டங்களையும் நாங்கள் மீட்டெடுத்து பணியாற்றினோம்.

கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின், தலித்மக்களுக்கு எதிரான குற்றங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருவாரியாக குறைத்து இருக்கிறது. தலித்மக்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதை அதிகப்படுத்தியுள்ளோம்.

ஆனால், காங்கிரஸ் அரசோ நாட்டின் வரலாற்றில் இருந்து அம்பேத்கர் பெயரை அழிக்கும் முயற்சில் தான் ஈடுபட்டது. அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், இந்த கசப்பான உண்மை உணர்ந்திருக்கும்.

பாபா சாஹேப் அம்பேத்கருக்கு மரியாதைசெய்யும் விதத்தில் காங்கிரஸ் செய்த ஒருபணியைச் சொல்லட்டும். இதை நான் சவால்விட்டுச் சொல்கிறேன்.

கடந்த இருநாட்களாக நாட்டில் பேசப்பட்டு வரும் துர்பாக்கியமான சம்பவங்கள், அறிவார்ந்த, பன்பட்டசமூகத்தில் நடந்திருக்க வேண்டிய சம்பவங்கள் இல்லை.

ஒரு நாடாக, ஒரு சமூகமாக நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும். நான் அனைவருக்கும் உறுதிகூறுகிறேன், தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மகள்களுக்கு நிச்சயமாக நீதிகிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்தசமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடவேண்டும். இந்தமாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

நமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் எங்காவது சென்று விட்டு தாமதாக வீட்டுக்குவந்தால், ஏங்கே சென்றாய் என்று கேட்கிறோம். அதே போலவே மகன்களும் இரவு நேரத்தில் தாமதமாக வந்தால் இதேகேள்வியை கேட்கிறோம். நாம் நமது குடும்ப முறையை வலுப்படுத்த வேண்டும். நமது சமூக மதிப்புகளையும், சட்டம் மற்றும் ஒழுங்கையும் வலிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...