பணம் இல்லை என்று கல்வியை கைவிடும் நிலை யாருக்கும் ஏற்ப்படக் கூடாது

''மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கிகணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

திருச்சி ஜோசப் கல்லுாரியின், 175வது ஆண்டு துவக்கவிழா நேற்று நடந்தது. கல்லுாரி ரெக்டர் லியோனார்ட் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.கலெக்டர் ராசா மணி, பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் மணி சங்கர், ஜேசு சபை தலைவர் டேனிஸ் பொன்னையா முன்னிலை வகித்தனர்.

விழாவில், 175வது ஆண்டு விழா மலரை வெளியிட்டு, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: யு.ஜி.சி., துவங்கப்பட்ட போது, 20 பல்கலைக் கழகங்கள், 500 கல்லுாரிகள் இருந்தன. தற்போது, 900 பல்கலைக் கழகங்களும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லுாரிகளும் உள்ளன.நாடு சுதந்திரம் பெற்ற பின்னரே இந்தமாற்றம் ஏற்பட்டது. பணம் இல்லாததால் கல்வியை தொடர முடியவில்லை என்ற நிலை, எந்தவொரு மாணவனுக்கும் ஏற்படக் கூடாது என்பதில், பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

இதற்காகத்தான் பல லட்சம் மாணவர்கள் பலன்பெறும் வகையில், கல்வி உதவித் தொகைகள் வழங்கப் பட்டுள்ளன. கல்வி உதவித் தொகை, மாணவர்களை சென்றடைவதில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்க, டிச., 1ம் தேதி துவங்கி, ஒவ்வொரு மாதமும், அந்த மாணவனின் வங்கிக்கணக்கில், உதவித் தொகையை வரவு வைக்கும் திட்டம், நாடுமுழுவதும் அமல்படுத்தப் படவுள்ளது.

அரசு பள்ளிகளில் தலா, 20 லட்சம் ரூபாய் செலவில், 2,500, 'அடல்'ஆய்வகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆண்டுதோறும், 2,500 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...