மத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்துபோகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் வேணு கோபால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்தவிழா ஒன்றில் பேசியவர், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு நமது நாட்டில் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக மிக ஆபத்தனது. இது அரசியலமைப்பு நெறிமுறையை சாகடிக்கும் அல்லது நாட்டின் முதல் பிரதமரான நேரு பயந்ததுபோல் சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறிவிடும் என்பது உண்மையாகி விடும்.

சபரிமலை வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது என்கிறார். ஆனால் மற்ற 4 நீதிபதிகளும் அரசியலமைப்பு அறநெறிகளின்படி தீர்ப்பு வழங்குகிறார். நீங்கள் ஒருதனிநபரை வைத்து வழக்கை கையாள்கிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களை பொருத்து கையாளப்பட வேண்டும். மதநம்பிக்கைகளில் தலையிடும் போது நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும். இதில் கோர்ட் தலையிடுவதை ஒட்டுமொத்த நாட்டுமக்களும் விரும்பவில்லை.

அரசியலமைப்பு நெறிமுறை என்பது அனைத்து அதிகாரங் களையும் கொண்ட பலமான ஆயுதம். அதை கவனமாக கையாளவேண்டும். ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்தும் முடிந்துவிட்ட பிறகும் அதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும்.

சபரிமலை வழக்கில் சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் இருவேறு குரல்களில் பேசி உள்ளது. இதில் அரசியலமைப்பு நெறிமுறை எங்கே உள்ளது. சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்களை நீர்த்து போக செய்வதாகவே உள்ளது. படிப்பறிவு குறைவாக இருந்தாலும் மக்களுக்கு தெரியும் தங்களுக்கு எது நல்லது என்று என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...