மத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்துபோகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் வேணு கோபால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்தவிழா ஒன்றில் பேசியவர், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு நமது நாட்டில் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக மிக ஆபத்தனது. இது அரசியலமைப்பு நெறிமுறையை சாகடிக்கும் அல்லது நாட்டின் முதல் பிரதமரான நேரு பயந்ததுபோல் சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறிவிடும் என்பது உண்மையாகி விடும்.

சபரிமலை வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது என்கிறார். ஆனால் மற்ற 4 நீதிபதிகளும் அரசியலமைப்பு அறநெறிகளின்படி தீர்ப்பு வழங்குகிறார். நீங்கள் ஒருதனிநபரை வைத்து வழக்கை கையாள்கிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களை பொருத்து கையாளப்பட வேண்டும். மதநம்பிக்கைகளில் தலையிடும் போது நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும். இதில் கோர்ட் தலையிடுவதை ஒட்டுமொத்த நாட்டுமக்களும் விரும்பவில்லை.

அரசியலமைப்பு நெறிமுறை என்பது அனைத்து அதிகாரங் களையும் கொண்ட பலமான ஆயுதம். அதை கவனமாக கையாளவேண்டும். ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்தும் முடிந்துவிட்ட பிறகும் அதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும்.

சபரிமலை வழக்கில் சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் இருவேறு குரல்களில் பேசி உள்ளது. இதில் அரசியலமைப்பு நெறிமுறை எங்கே உள்ளது. சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்களை நீர்த்து போக செய்வதாகவே உள்ளது. படிப்பறிவு குறைவாக இருந்தாலும் மக்களுக்கு தெரியும் தங்களுக்கு எது நல்லது என்று என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...