அதிமுக. கூட்டணியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியி டுகிறார். கடந்த சிலநாட்களாக தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் இன்று நயினார் நாகேந்திரன், அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் வேனில்நின்றபடி பிரசாரம் செய்தனர்.
அப்போது மாடியில் நின்று கொண்டிருந்தவர்களில் யாரோ சிலர் பாட்டிலைவீசினர். அந்தபாட்டில் நயினார் நாகேந்திரன் அருகே நின்று கொண்டிருந்த திருப்புல்லாணி அதிமுக. அவைத்தலைவர் உடையத்தேவர் தலையில் விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பிரசாரத்தில் பாட்டில் வீசப் பட்டது குறித்து திருப்புல்லாணி போலீசில் புகார்செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.