மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்

மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது  இந்தஅரசில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான சிவராஜ்சிங்  சவுகான் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கருத்துதெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்தூரில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அரசுத்துறைகளில் இடமாற்றங்கள் மற்றும் பதவிகளுக்கு ஒரு அமைச்சர் ஒரு விலை  சொல்கிறார். மற்றொரு அமைச்சர் மற்றொரு விலை சொல்கிறார். மத்திய பிரதேச வரலாற்றிலேயே  மிகவும் ஊழல் நிறைந்த அரசு இதுதான். இந்த அரசின் அமைச்சர்கள் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள்.

வரும் 18-ஆம் தேதி இங்கு முதலீட் டாளர்கள் மாநாடு நடக்க உள்ள நிலையில் நான் அரசை விமர்சிக்க விரும்பவில்லை. எனக்கு  மாநிலத்தின் மேல் அக்கறை உள்ளது. இங்கு முதலீடுசெய்து வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு நான் தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்திய மழையின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களது பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுவரை அதுகுறித்த கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்கள் வழங்குவது குறித்த கேள்வியே எழவில்லை. இந்த அரசு விவசாயிகளுக்கு உரியநிவாரணம் வழங்கவில்லை என்றால், நான் ஒரு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...