மோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந்தவர் ப.சிதம்பரம்

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என் மீதும் மோடி, அமித்ஷா ஆகியோர் மீதும் பொய்வழக்குகளை தொடர்ந்தார் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த இருவழக்குகளிலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத் திருக்கிறது.

இது தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டி:

மத்திய பாஜக அரசு ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது என் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டன.

அதே போல் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மீதும் பொய்வழக்குகள் போடப்பட்டன. ஆனால் இந்தவழக்குகளில் நாங்கள் நிரபராதிகள் என நிரூபித்து இருக்கிறோம்.

ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்குகளில் ஆதாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டன. தற்போது நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்குகள் இருக்கின்றன. ஆகையால் நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.