மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பருக்கு நன்றி

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் பரவிவருகிறது. அந்நாட்டில் 9 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவில் மலேரியா நோய்க்கு தடுப்புமருந்தாக பயன்படுத்தப்பட்டுவரும்  ஹைட்ரோக்சி குளோரோகுயின் எனப்படும் மருந்து கொரோனா வைரசை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்துவதில் முக்கியபங்கு வகிக்கிறது.
இதனால், இந்த வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு தடைவிதித்தது.
இருப்பினும் உயிர் காக்கும் மருந்து என்பதால் உலக நாடுகளின் தேவையை உணர்ந்து இந்தியா ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கியது.
இதற்கிடையே, குளோரோகுயின் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை  இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டுபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, ஏற்றுமதிக்கு விதிக்கப் பட்ட தடை நீக்கப்பட்டதால் இஸ்ரேல் நாட்டிற்கு குளோரோகுயின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தமருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று இஸ்ரேலை சென்றடைந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெதன்யாகு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய எனது அருமைநண்பர் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...