ராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக

கடந்த பல வருடங்களாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்திவந்தது. பாஜகவின் பலம் மிகவும்குறைந்து இருந்ததால், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கவேண்டிய நிலை இருந்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, 10 எம்பி-க்களின் பதவிக்காலம் முடிவடை வந்ததை அடுத்து, அந்த இடங்களுக்கு தேர்தல்நடந்தது. அதில், மத்திய நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட ஒன்பது பாஜக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

அதபோல, உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ராஜ் பாபரின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, அங்கும், பாஜக-வைச் சேர்ந்த, நரேஷ் பன்சால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபாவில், பா.ஜ.,வின் பலம், 92 ஆக உயர்ந்துள்ளது. இதைதவிர, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு, ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.ராம்தாஸ் அதவாலேவின் இந்திய குடியரசுகட்சி, அசாம் கனபரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள்கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுக்கு, தலா, ஒருஉறுப்பினர் உள்ளனர்.

அந்த ஏழு உறுப்பினர் களையும் சேர்த்தால், ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் பலம், 104 ஆக உயர்ந்துள்ளது.இவை தவிர, அ.தி.மு.க.,வுக்கு, 9, பிஜு ஜனதா தளம், 9, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு, 7, ஒய்.எஸ்.ஆர்., காங்.,குக்கு, 6 ராஜ்ய சபா உறுப்பினர்கள் உள்ளனர்.இக்கட்சிகள், பிரச்னைகளின் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. எனவே, ராஜ்யசபாவில், தே.ஜ., கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது.லோக் சபாவில் பெரும்பான்மை பலம் இருப்பதால், தே.ஜ., கூட்டணியின் மசோதாக்கள் அங்கு சிக்கலின்றி நிறைவேற்றப்பட்டுவந்தன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...