ராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக

கடந்த பல வருடங்களாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்திவந்தது. பாஜகவின் பலம் மிகவும்குறைந்து இருந்ததால், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கவேண்டிய நிலை இருந்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, 10 எம்பி-க்களின் பதவிக்காலம் முடிவடை வந்ததை அடுத்து, அந்த இடங்களுக்கு தேர்தல்நடந்தது. அதில், மத்திய நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட ஒன்பது பாஜக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

அதபோல, உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ராஜ் பாபரின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, அங்கும், பாஜக-வைச் சேர்ந்த, நரேஷ் பன்சால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபாவில், பா.ஜ.,வின் பலம், 92 ஆக உயர்ந்துள்ளது. இதைதவிர, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு, ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.ராம்தாஸ் அதவாலேவின் இந்திய குடியரசுகட்சி, அசாம் கனபரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள்கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுக்கு, தலா, ஒருஉறுப்பினர் உள்ளனர்.

அந்த ஏழு உறுப்பினர் களையும் சேர்த்தால், ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் பலம், 104 ஆக உயர்ந்துள்ளது.இவை தவிர, அ.தி.மு.க.,வுக்கு, 9, பிஜு ஜனதா தளம், 9, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு, 7, ஒய்.எஸ்.ஆர்., காங்.,குக்கு, 6 ராஜ்ய சபா உறுப்பினர்கள் உள்ளனர்.இக்கட்சிகள், பிரச்னைகளின் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. எனவே, ராஜ்யசபாவில், தே.ஜ., கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது.லோக் சபாவில் பெரும்பான்மை பலம் இருப்பதால், தே.ஜ., கூட்டணியின் மசோதாக்கள் அங்கு சிக்கலின்றி நிறைவேற்றப்பட்டுவந்தன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...