‘சமஸ்கிருதம் தேசிய மொழி: பரிந்துரைத்தார் அம்பேத்கர்’

”சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,” என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.அம்பேத்கரின், 130வது பிறந்தநாளான நேற்று, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்டபல்கலைக்கழகத்தில், புதியகட்டட துவக்க விழா நடைபெற்றது.இதில், மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்டோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பாப்டே பேசியதாவது:இன்றைய நிகழ்ச்சியில், எந்தமொழியில் உரையாற்றுவது என்பது குறித்து, காலையில் தீவிரமாக யோசித்தேன்.

இன்றைய தினம், அம்பேத்கரின் பிறந்ததினம். அது நினைவுக்கு வந்ததும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம்பேசும் மொழிக்கும், பணியின்போது நாம் பயன்படுத்தும் மொழிக்கும் நீண்டநாட்களாக உள்ள முரண்குறித்து நினைவு வந்தது.

இதை அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்துள்ளார். எனவே தான், அவர் சமஸ்கிருதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க பரிந்துரைத்தார்.வட மாநிலத்தவர்கள், தமிழ்மொழியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென் மாநிலத்தவர்கள், ஹிந்தியை தேசியமொழியாக ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார்.சமஸ்கிருதத்திற்கு இரு பகுதிகளிலும் பெரும் எதிர்ப்பு இருக்காது என்பதால் இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...