ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது . பிரணாப்பை தாங்கள் விருப்பமின்றி ஆதரிப்பதாக வேறு அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கருத்துதெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை ஆதரிப்பது என்று முடிவெடுத்தோம் . ஆனால் துரதிருஷ்ட வசமாக தேர்தலில்போட்டியிட அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்பதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவும்கூட. எங்களிடம் இருக்கும் 50 ஆயிரம் ஓட்டுகளை வீணாக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் .
இங்கேயோ கூடா நட்பு கேடாய்முடியும் என ஆருடம் சொன்னார் ஒருவர் . அங்கேயோ “விருப்பமின்றி எடுத்த முடிவு” என பிரணாபை ஆதரிப்பதை குறிப்பிடுகிறார் ஒருவர், இவர்களில் யாரும் நாட்டுமக்களுக்காக பாடுபட தயார் இல்லை, தங்களுக்குள் எதையோ எதிர்பார்த்து இந்தகூட்டணியில் தொடர்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.