கூகுள்பிளஸ் – ஹேங் அவுட்டின் மூலமாக கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மோடி

கூகுள்பிளஸ் - ஹேங் அவுட்டின் மூலமாக  கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மோடி  ‘அரசியலில் தொழில்நுட்பம்’ என்னும் தலைப்பில் பிரபல கம்ப்யூட்டர் தேடு பொறி இயந்திரமான (சர்ச் என்ஜின்) கூகுள்நிறுவனம் வரும் 21ம் தேதி ‘கூகுள்பிளஸ் – ஹேங் அவுட்டின் மூலமாக கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது.

இதில் இங்கிலாந்தின் பிரபல நாளிதழான ‘கார்டியனின் ஆசிரியர் ஆலன் ரஸ் பிரிட்ஜர், அமெரிக்க அதிபர் பராக்ஒபாமாவின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டளாராக இரண்டு முறை பணியாற்றிய ஸ்டெபானிகட்டர் உள்ளிட்ட உலக பிரபலங்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்று கின்றனர்.

இவர்களது வரிசையில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவின் எதிர் கால வடிவமைப்பில் வலை தளங்களின் பங்கு எனும் தலைப்பில் இந்த கருத்து அரங்கில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

தொழில் நுட்ப மேம்பாடுகளை பயன் படுத்தி 3-டி வீடியோ கான்பிரஸ் மூலம் குஜராத் சட்ட சபை தேர்தல் பிரசாரத்தில் ஒரேநேரத்தில் 50 க்கும் அதிகமான இடங்களில் பேசி நரேந்திரமோடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

டுவிட்டர் இணைய தளத்தில் மோடியை சுமார் 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு சாதனையாக கூகுள்பிளஸ் – ஹேங் அவுட்டின் மூலமாக கருத்தரங்கத்தில் கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...