சி.பி.ஐ., எடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையிடு இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் வேளையில் இன்று அவைகள் சி.பி.ஐ., டைரக்டர் மூலமே வெளியாகியிருப்பதால் பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பா.ஜ.க, மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ., கடந்த சிலநாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவரஅறிக்கை தாக்கல்செய்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தங்கள் தரப்பு விவரத்தை அபிடவிட்டாக தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் சிபிஐ., டைரக்டர் ரஞ்சித்சின்கா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் எங்களின் அறிக்கைவிவரம் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை அவர் பார்த்தார் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., செய்திதொடர்பாளர் பிரதாப்ரூடி கூறியதாவது: நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சி.பி.ஐ., அதிகாரத்தில், மத்திய அரசு தலையிட்டுவருகிறது என கூறிவருகிறோம். இது இப்போது நிரூபணமாகி விட்டது . பிரதமரை காப்பாற்ற முயற்சிநடந்துள்ளது. எனவே சட்டஅமைச்சர் அஸ்வனி குமாரும், பிரதமரும் பதவி விலகவேண்டும். என்று அவர் கூறினார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.