காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது சிபிஐ., இல்லை என்றால் எப்போதோ இந்த அரசு கவிழ்ந்திருக்கும்’ என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவருமான, அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று இது குறித்து மேலும் கூறியதாவது: காங்கிரசை வீழ்த்தும்எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது. அதற்கான மனோபாவம் இனி வரும்காலங்களில், தீவிரமடையும். அப்போது, காங்கிரசை வீழ்த்தி பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும். ஆட்சியில் இருப்பதால், அதிகார மமதையுடன் செயல்படுகிறது காங்கிரஸ்.
சி.பி.ஐ., என்ற அமைப்பை கையில் வைத்துக்கொண்டு, எதிர்க் கட்சிகளை மிரட்டியும், அடிபணியவும் வைக்கிறது. சிபிஐ., என்ற ஒருஅமைப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மன்மோகன்சிங் அரசு எப்போதோ கவிழ்ந்திருக்கும். சிபிஐ., மூலம், மாயாவதி , முலாயம் சிங் போன்றவர்களை மிரட்டியே, இந்தஅரசு பதவியில் நீடித்து வருகிறது என்று அருண் ஜெட்லி கூறினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.