வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது

 வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம் இன்று சுதந்திர தினம். 66 வருடங்களுக்கு முன் வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம்.

கோடிக் கணக்கான அப்பாவிகள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து போராடி

பெற்ற சுதந்திரம் இன்று இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான, தனிமனித ஒழுக்கம் இல்லாத, லஞ்ச மற்றும் ஊழல் மலிந்த பெருச்சாளிகளுக்கு பயன் படுகிறது.

தன்னலம் இன்றி சேவை ஆற்றுவது என்பது இன்று பைத்தியக் காரத்தனமாக மாறிவிட்டது. ஒரு சிறு உதவி செய்தால் கூட பெரும்பான்மை மக்கள், அதை விளம்பரப்படுத்திக் கொண்டுதான் செய்கிறார்கள். தேசப்பற்றுக் கூட பகட்டுக்காக செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது. இந்தியன் என்கிற உணர்வு கூட கிரிக்கெட்டை தாண்டி வெளி வருவதில்லை.

பள்ளிக் கூடங்களில் கடனே என்று சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. மனப்பாடம் செய்யப்பட்ட தேசிய கீதம், உணர்வுகள் இல்லாமல் உளரப்ப‌டுகிறது. பல கோடி மக்களுக்கு சுதந்திரம் என்பது கொலைஞர் டீவியில் சொல்வது போல் வெறும் விடுமுறை தினமாக மாறிவிட்டது.

அன்று இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு அற்புதமான தன்னலமற்ற இயக்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இன்று அது இந்திய இத்தாலிய காங்கிரஸாக மாறி நாட்டை சூரையாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், இனம் என மக்களை இந்த காங்கிரஸ் அரக்கன் பிரித்து மேலும் மேலும் ஊழல்களில் உலக சாதனை புரிந்துக் கொண்டிருக்கிறது. ஜாதியால், மொழியால், மதத்தால், இனத்தால் பிரிந்துள்ள பெரும்பான்மை மக்கள், இந்த அரக்கனை ஏறெடுத்தும் பார்க்காமல் கூட்டுப் புழுக்களாய் சுருங்கி கிடக்கிறார்கள்.

வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது. இந்த காங்கிரஸ் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் பெறப்போகும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம். தேசப்பற்றும், தேசிய சிந்தனையும் உள்ள கட்சியை தேந்தெடுத்து நாட்டை ஒப்படைப்பதே இன்று நம் தலையாய கடமை. அவ்வாறு செய்வதன் மூலமாகவே நாம் நிஜமான விடுதலையை பெற்றோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

Thanks; Enlightened master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...