வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது

 வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம் இன்று சுதந்திர தினம். 66 வருடங்களுக்கு முன் வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம்.

கோடிக் கணக்கான அப்பாவிகள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து போராடி

பெற்ற சுதந்திரம் இன்று இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான, தனிமனித ஒழுக்கம் இல்லாத, லஞ்ச மற்றும் ஊழல் மலிந்த பெருச்சாளிகளுக்கு பயன் படுகிறது.

தன்னலம் இன்றி சேவை ஆற்றுவது என்பது இன்று பைத்தியக் காரத்தனமாக மாறிவிட்டது. ஒரு சிறு உதவி செய்தால் கூட பெரும்பான்மை மக்கள், அதை விளம்பரப்படுத்திக் கொண்டுதான் செய்கிறார்கள். தேசப்பற்றுக் கூட பகட்டுக்காக செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது. இந்தியன் என்கிற உணர்வு கூட கிரிக்கெட்டை தாண்டி வெளி வருவதில்லை.

பள்ளிக் கூடங்களில் கடனே என்று சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. மனப்பாடம் செய்யப்பட்ட தேசிய கீதம், உணர்வுகள் இல்லாமல் உளரப்ப‌டுகிறது. பல கோடி மக்களுக்கு சுதந்திரம் என்பது கொலைஞர் டீவியில் சொல்வது போல் வெறும் விடுமுறை தினமாக மாறிவிட்டது.

அன்று இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு அற்புதமான தன்னலமற்ற இயக்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இன்று அது இந்திய இத்தாலிய காங்கிரஸாக மாறி நாட்டை சூரையாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், இனம் என மக்களை இந்த காங்கிரஸ் அரக்கன் பிரித்து மேலும் மேலும் ஊழல்களில் உலக சாதனை புரிந்துக் கொண்டிருக்கிறது. ஜாதியால், மொழியால், மதத்தால், இனத்தால் பிரிந்துள்ள பெரும்பான்மை மக்கள், இந்த அரக்கனை ஏறெடுத்தும் பார்க்காமல் கூட்டுப் புழுக்களாய் சுருங்கி கிடக்கிறார்கள்.

வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது. இந்த காங்கிரஸ் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் பெறப்போகும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம். தேசப்பற்றும், தேசிய சிந்தனையும் உள்ள கட்சியை தேந்தெடுத்து நாட்டை ஒப்படைப்பதே இன்று நம் தலையாய கடமை. அவ்வாறு செய்வதன் மூலமாகவே நாம் நிஜமான விடுதலையை பெற்றோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

Thanks; Enlightened master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...