மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

 செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து விட்டது. மங்கள்யான் செயற்கை கோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி., ராக்கெட்மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியமைக்கு ஜனாதிபதி

பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அரசியல் தலைவர்கள் , விஞ்ஞானிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனதுசொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம்கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி ஏவப்பட்டதால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப் பாதையில் இருந்து விடுபட்டு, செவ்வாயைநோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வாயின் பாதையை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சிலதினங்களில் ( 2014 – செப் 24 ) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். பிறகு அங்கிருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிமவளம், மனிதர் வாழ ஏற்றசூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீனகருவிகள் “மங்கள்யான்’ செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின்எடை, 15 கிலோ.

செவ்வாய் கிரகத்தின் மேல்பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள கருவிதெரிவிக்கும். உலகளவில் இது மிகமுக்கிய சோதனையாகும்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றிபெற்று உலக சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்றஇடத்தை பிடிகத்தது. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம்ஆகியன வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...