காஷ்மீருக்குள் ராணுவத்தை அனுப்ப ஆர்வம் இன்றி இருந்த நேரு

 பாகிஸ்தான் படைகள் நெருங்கிய போதிலும் காஷ்மீருக்குள் ராணுவத்தை அனுப்ப ஆர்வம் இன்றி முன்னாள் பிரதமர் நேரு இருந்தார் என பாஜக.,வின் மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் முதலாவது பிரதமர் ஜவகர்லால்நேருவுக்கும், முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார்வல்லபாய் படேலுக்கும் இடையிலான கருத்துவேறுபாடு பற்றி அத்வானி தமது வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஹைதராபாத்துக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை வலியுறுத்திய படேலை நேரு மதவாதி என விமர்சித்ததாக கடந்த 5ந்தேதி அத்வானி எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று தனது வலைத்தளபக்கத்தில் அத்வானி புதியதகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு நடந்த அச்சம்பவம் குறித்து அப்போது ராணுவகர்னலாக இருந்த சாம்மானக்ஷா அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி அத்வானி எழுதியிருப்பதாவது:

கடந்த 1948ம் ஆண்டு காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க விரும்பினார். இதுதொடர்பான இணைப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

அதுபிடிக்காமல் காஷ்மீரை கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான்படைகள் விரைந்தன. பாகிஸ்தான் படைகளின் ஆதரவுபெற்ற பழங்குடியினர் ஸ்ரீ நகரை நெருங்கினர்.

அப்போது அமைச்சரவை கூட்டப்பட்டது. காஷ்மீரில் நிலவும்சூழ்நிலை குறித்து சாம்மானக்ஷா விளக்கி கூறினார். அங்கு இந்தியபடைகளை அனுப்பவேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

ஆனால் அங்கு படைகளை அனுப்ப நேருவுக்கு ஆர்வம்இல்லை. இப்பிரச்சினையை ஐநா.வுக்கு எடுத்துச்செல்லலாம் என்று வழக்கம்போல கூறினார்.உடனே சர்தார் வல்லபாய்படேல் பொறுமை இழந்தார். அவர் நேருவைப்பார்த்து, ஜவகர்லால், உங்களுக்கு காஷ்மீர் வேண்டுமா அல்லது அதை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா? என கேட்டார்.

அதற்கு நேரு, காஷ்மீர்வேண்டும் என கூறினார். உடனே படேல், அப்படியானால், தயவு செய்து உத்தரவு தாருங்கள் என்று கூறினார். அதற்கு நேரு பதில் அளிப்பதற்குள் படேல், சாம் மானக்ஷாவை பார்த்து, உங்களுக்கு உத்தரவு கிடைத்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து, பாகிஸ்தான் படைகளுடன் போரிடுவதற்காக, ஸ்ரீ நகருக்கு இந்தியபடைகள் பறந்துசென்றன என்று அத்வானி எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...