கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி மலரும்

 கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சிமலரும் என பாஜக தேசிய துணைத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடத்தப்படும் தேசிய நிர்வாகிகள்,செயற்குழு கூட்டத்தை பெங்களூருவில் நடத்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 1967-இல் கர்நாடகத்தின் ஹுப்பள்ளியில் ஜன சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. பாஜகவாக மாறியபிறகு, 1993,1998, 2008 ஆகிய ஆண்டுகளில் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் தேசியசெயற்குழு பெங்களூருவில் கூடவிருக்கிறது.

கர்நாடகத்தில் நடந்து வரும் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சிமாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். எனவே, கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான செயல்திட்டம் செயற்குழுவில் வகுக்கப்படும். கர்நாடகத்தை மையமாக வைத்துக்கொண்டு தென்னிந்தியாவில் பாஜகவை பலப்படுத்தி ஆட்சி அமைப்பதே தேசிய செயற்குழுவின் முக்கிய நோக்கமாகும். தேசிய செயற்குழுவை நாட்டுமக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.தேசிய அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய முடிவுகளும் செயற்க் குழுவில் எடுக்கப்படும். நாட்டின் வளமான எதிர் காலத்திற்கு தேவையான விஷயங்கள் குறித்து செயற்குழு நல்ல முடிவெடுக்கும். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான வியூகங்களும் அமைக்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...