சகாரா குழும வழக்கு பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தமுடியாது

‛சகாரா குழுமத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரம் சமர்பிக்கப்படாததால் பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தமுடியாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
 

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்தபோது சகாரா, பிர்லா குழுமங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் கடும் குற்றம் சாட்டை முன்வைத்தார்.

இதுதொடர்பாக, கடந்த 2013, 14 ஆகிய ஆண்டுகளில் சகாரா குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பறி முதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என கூறி சில ஆவணங்களை அவர் கடந்தமாதம் வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட சில அரசியல் வாதிகளின் பெயர் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டிய ராகுல் ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் மோடியை விசாரிக்க ண்டும் என்றார்.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த்பூஷண் கோர்ட் மேற்பார்வையில் பிரதமர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த கோரி அபிடவிட் தாக்கல்செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதேகி, வாதிட்டதாவது 'பிரதமர் மோடிக்கு எதிரான லஞ்சகுற்றசாட்டில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப் படவில்லை. இதுபோன்ற காகித ஆவணங்களை சட்டப் பூர்வ ஆதாரமாக ஏற்றால் நாட்டில் ஒரு வரும் பாதுகாப்பாக இருக்கமுடியாது' என்றார்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு:

குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடி உள்ளிட்ட சில அரசியல் வாதிகள் சகாரா குழுமத்திடம் இருந்து லஞ்சம்பெற்றதாக குற்றம்சாட்டி தொடரப்பட்டுள்ள இந்தவழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப் படவில்லை. ஆதாரமற்ற இந்த வழக்கில் பிரதமர் மோடியை விசாரிக்க முடியாது.

இந்த வழக்கில், போதிய ஆதாரமின்றி விசாரணைக்கு உத்தரவிட்டால், அது அரசியல்அமைப்பை நடைமுறைப்படுத்து பவர்களை இயங்கவிடாமல் முடக்குவது போல் ஆகிவிடும். மேலும், அது ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பானதல்ல.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த நவ.,14 ஆம் தேதி நடந்த விசாரணையின் போதும் ஆதாரமற்ற இந்தவழக்கில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு நாடு திரும்பியுள்ள ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசியலில் மீண்டும் ஒருசறுக்கலை தந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...