டூர் போனவர்கள் 2 கோடி ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் கணக்கு காட்டியது 76 லட்சம் பேர்

நாட்டில் முறையாக வருமானவரி கட்டுபவர்கள் என்றால், அது நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தான். பல்வேறு துறைகளில் பல லட்சங்கள் சம்பாதிப்பவர்களும், ெபரும் கோடீஸ்வரர்களில் பலர் வரி ஏய்ப்புதான் செய்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் 2 கோடி பேர்  வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்கள். 1.25 கோடிக்கும் அதிகமாக  கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஆனால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் கணக்கு காட்டியிருப்பது வெறும் 76 லட்சம் பேர்தான்

2015-16ம் நிதியாண்டில் தனிநபர்கள் 3.7 கோடி பேர் வருமானவரி  செலுத்தியுள்ளனர். அவர்களில் 99 லட்சம்பேர் ஆண்டுக்கு ரூ.2.5  லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர். 1.95 கோடி பேர், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சுமார் 52 லட்சம் பேர், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் வருமானம்  பெறுவதாகவும், 24 லட்சம்பேர், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக  வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஆகமொத்தத்தில், நாடுமுழுவதும் வெறும் 76 லட்சம் பேர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகம் என்று கணக்கு காட்டியிருக்கிறார்கள். 2 கோடிபேர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட நிலையில், இது முரண்பாடாக உள்ளது. அதே போல், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுவதாக 1.72  லட்சம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

ரூ.500, ரூ.1000 செல்லாது என நவம்பர் 8ம் தேதி அறிவித்தபின்பு, டிசம்பர் 30ம் தேதி வரையிலான நாள்களில் வங்கிகளில் 1.09 கோடி  கணக்குகளில் ரூ.2 லட்சம்முதல் ரூ.80 லட்சம் வரையில் டெபாசிட்  செய்யப்பட்டிருக்கின்றன. ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக 1.48 லட்சம் கணக்குகளில் டெபாசிட்  செய்யப்பட்டிருக்கின்றன. 

நன்றி அருண்ஜெட்லி 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...