பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து விவகாரங்கள் குறித்தும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது விவாதிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது பேசிய பிரதமர் மோடி, பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாராகஉள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து பேசவேண்டும் என கேட்டுள்ளனர். இதனை நான் வரவேற்கிறேன். பொருளாதார பிரச்னைகள் குறித்த விவாதங்களும், உங்களின் ஆலோசனைகளும் நிச்சயம்தேவை.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உலக நாடுகளின் கவனத்தை எவ்வாறு இந்தியாவிற்கு சாதகமாகதிருப்புவது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். புத்தாண்டு துவங்கி இருக்கும் இந்தநேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச்சென்றால், அது நாட்டு நலனுக்கு சிறந்ததாக அமையும் என்றார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |