மகாராஷ்டிரம், ஹரியாணாவில் தனிப் பெரும் கட்சியாக உருவேடுக்கும் பாஜக

 மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தல்களில், தனி பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ், ஜீ நியூஸ் தொலைக் காட்சிகளுக்காக "சி வோட்டர்' நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில், பாஜகவுக்கு 129 இடங்கள் கிடைக்கும். சிவசேனைக்கு 56, காங்கிரஸýக்கு 43, தேசியவாத காங்கிரஸýக்கு 36, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக்கு (எம்என்எஸ்) 12, பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 12 இடங்கள் கிடைக்கும்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், பாஜகவுக்கு 37 இடங்கள் கிடைக்கும். இந்திய தேசிய லோக் தளத்துக்கு 28, காங்கிரஸýக்கு 15, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸýக்கு 6, பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. நீல்சன்: ஏ.பி.பி. தொலைக்காட்சிக்காக ஏ.சி. நீல்சன் நடத்திய வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 127 இடங்கள் கிடைக்கும். சிவ சேனைக்கு 77, காங்கிரஸýக்கு 40, தேசியவாத காங்கிரஸýக்கு 34, எம்.என்.எஸ் கட்சிக்கு 5 இடங்களும் கிடைக்கும். ஹரியாணாவில் பா.ஜ.க.,வுக்கு 46, காங்கிரஸýக்கு 10, இந்திய தேசிய லோக்தளத்துக்கு 29, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸýக்கு 6, பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா டி.வி.: இந்தியா டி.வி. நடத்திய வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 124 முதல் 134 வரையிலான இடங்கள்கிடைக்கும். சிவ சேனைக்கு 51லிருந்து 61 வரையிலும், காங்கிரஸýக்கு 38 முதல் 48 வரையிலும், தேசியவாத காங்கிரஸூக்கு 31 முதல் 41 வரையிலும், எம்என்எஸ் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 9 முதல் 15 வரையிலான இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...