காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே

 பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் , மூத்த தலைவருமான இல.கணேசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர்பாசன பிரச்சினை இருமாநில மக்களின் பிரச்சினையாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழகமும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் ஆண்டது. அப்போது இருமாநில அரசுகளையும் அழைத்து காவிரி நீர் பிரச்சினைகள் குறித்து பேசினார்.

அதே போல் தற்போது இந்தபிரச்சினை குறித்து பிரதமர் மோடி இருமாநில அரசுகளையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பார். பாஜக. அரசு எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாகத் தான் செயல்படும்.

காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே . இந்த நதிநீர் இணைப்பை காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டது. தற்போது பாஜக. அரசு தென்னக நதிகளை இணைப்பதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமானது . கச்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போதே வாஜ்பாய் எதிர்த்து குரல்கொடுத்தார். பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் பிரச்சினை குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது இருநாட்டு பிரச்சினை ஆகும். இதில் மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வகைப்படுத்த வேண்டும்.

இதனை மீனவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டாலே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடும். வேதாரண்யம் பகுதியில் மகாத்மாகாந்தி உப்பு சத்தியாகிரகம் செய்ததால் வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது. தற்போது இங்குள்ள உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திசெய்யும் உப்பை கொண்டுசெல்ல சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர்.

எனவே வேதாரண்யம் திருத்துறைப் பூண்டிக்கு ரெயில் போக்கு வரத்து வசதி ஏற்படுத்திதர ரெயில்வே அமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...